
குவாஹாட்டி: அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவுரவ் கோகோய் பாகிஸ்தான் சென்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது வருகை மற்றும் புறப்பாடு அட்டாரி எல்லையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.