பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ -ஐ இன்று அதிகாலை நடத்தி முடித்துள்ளது இந்திய ராணுவம்.

‘அதுக்குறித்து இந்திய அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?’ என்பதை பார்க்கலாம்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:

“இந்திய ராணுவம் குறித்து பெருமை கொள்கிறேன்.

பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்களை கொடூரமாக கொன்றதற்கான பாரதத்தின் பதிலடி ‘ஆபரேஷன் சிந்தூர்’.

இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் நடத்தப்படும் எந்த தாக்குதலுக்கும் தகுந்த பதிலடியை மோடி அரசு வழங்கும். வேரிலிருந்து தீவிரவாதத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் பாரதம் உறுதியாக நிற்கிறது”.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *