
ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் தாக்குதலையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து சுமார் 1.30 மணியளவில் இதுகுறித்து தகவல் வெளியிட்டிருந்தது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குரல் எழுந்துவர, இந்தத் தாக்குதல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆதரவாக நிற்கிறது. நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும் தமிழ்நாடு உறுதியுடன் நிற்கிறது. #OperationSindoor” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு ‘இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நேற்று இந்திய ராணுவம் தீவிரவாத அமைப்புகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.