
கோவை: “கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என சிவகிரி சம்பவத்தை முன்வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மே 6) நடந்தது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.