
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 259 இடங்களில் நடைபெறும் இந்த ஒத்திகைகளுக்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளையொட்டி, நாடு தழுவிய அளவில் சிவில் பாதுகாப்பு தயார் நிலையை மதிப்பிடுவதற்கும், ஒருங்கிணைப்பதற்குமான முக்கியமான கூட்டத்துக்கு உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலத் தலைமைச் செயலர்களும், சிவில் பாதுகாப்புத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.