
தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தார். ஆனால் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் கொடூர தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த சுமார் 20 பேர் உதவி செய்திருக்கக்கூடும் என்று சந்தேதிக்கப்படுகிறது. இதன்பேரில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவம், போலீஸார், என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.