
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு தங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தபோது கட்டுக் கட்டாக பணத்தை கைப்பற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீதிபதி வர்மா சர்ச்சையில் சிக்கினார்.