
சென்னை: “நாடு முக்கியம், பாகிஸ்தானை துண்டாக்க வேண்டும் என்று கூறிய அண்டை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்பி ரா.சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.