சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளுக்கு, மத்திய அரசு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 4 ஆண்டுகள் முடிவடைந்து 5-ம் ஆண்டு தொடங்கும் நிலையில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை அயல் நாடுகளிலும், ஐ.நா. சபையிலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *