
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது.
வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்றுப் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்தத் தொடர் தோல்விகளை ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஆதரவாக தோனியின் மனைவி ஆன சாக்ஷி பேசியிருக்கிறார். அதாவது, ” சிஎஸ்கே ஒரு கிரிக்கெட் அணி என்பதையும் தாண்டி, அது ஒரு குடும்பம், சாம்ராஜ்யம், உணர்வு.

வெற்றியோ, தோல்வியோ மஞ்சள் படைக்கு ஆதரவாக கம்பீரமாக நிற்போம். கர்ஜித்துக்கொண்டே இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…