
சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.