சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்க உள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 2025, ஏப். 22 அன்று சட்டமன்ற பேரவையில், விதி 110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *