இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன், கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகிய 3 இந்தியர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இந்தோனேசிய நீதிமன்றம் மூவருக்கும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மரண தண்டனை விதித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *