
கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாடகர் சோனு நிகம் மீது கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் பெங்களூருவில் பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சோனு நிகம் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் கன்னடத்தில் ஒரு பாடல் பாடும்படி கேட்டார். அப்போது பாடுவதை நிறுத்திவிட்டு பேசிய சோனு நிகம், “என்னுடைய வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால், நான் பாடிய சிறந்த பாடல்கள் கன்னட மொழியில்தான்.