தமிழகத்தில் 1972-க்கு முன்பு வரைக்கும் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை இருந்தது. 1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வை தொடங்கிய பிறகு களம் திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமான போட்டியாக மாறிப்போனது. அதன் பிறகு கடந்த 53 வருடங்களாக காங்கிரஸால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.

அ​தி​முக-​வும் திமுக-​வும் தங்​கள் தலை​மை​யிலேயே கூட்​ட​ணி​களை கட்​டமைத்து வரு​கின்​றன. காங்​கிரஸ் அதில் பத்​தோடு பதினொன்​றாகத்​தான் ஒட்​டிக் கொள்​கிறது. இன்​றைக்கு வந்த அண்​ணா​மலை, நயினார், சீமான், நடிகர் விஜய் போன்​றவர்​களைக் கூட முதல்​வர் வேட்​பாளர் என தெம்​பாகச் சொல்​கின்றன அவர்​கள் சார்ந்​திருக்​கும் கட்​சிகள். ஆனால், ஒரு காலத்​தில் தமி​ழ​கத்தை ஆளும் கட்​சி​யாக இருந்த காங்​கிரஸுக்​கு, ‘இவர் தான் எங்​களின் முதல்​வர் வேட்​பாளர்’ என்று சொல்ல இப்​போது தன்​னம்​பிக்கை இல்​லாமல் போய்​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *