
டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் திறக்கப்பட்டன.