
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி வந்துவிட்டதாக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துவிட்டு நிதி வரவில்லை என பொதுவெளியில் திமுக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜிஎஸ்டி வந்த பிறகுதான் நடுத்தர வர்க்கத்தினர் கூட வரி செலுத்தும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ஜிஎஸ்டி வரி அறிமுகமாவதற்கு முன்பே, மதிப்புக் கூட்டு வரி, அதோடு அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரி என 17 வகையான வரிகளும், 9 செஸ் வரிகளும் இருந்து வந்தன. தற்போது, இந்த வரிகள் அனைத்தும் கலந்துதான் இன்று ஜிஎஸ்டி ஆக உருவாகி உள்ளது.