லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரி​யா​னா​வின் அம்​பாலா, மேற்​கு ​வங்​கத்​தின் ஹசி​மாரா பகு​தி​யில் உள்ள இந்​திய விமானப் படை தளங்​கள் சார்​பில், ‘ஆபரேசன் ஆக்​ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் பயிற்சி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரஃபேல் உள்​ளிட்ட போர் விமானங்​கள் பங்​கேற்று உள்​ளன.

போர் பயிற்​சி​யின் ஒரு பகு​தி​யாக உத்தர பிரதேசத்​தின் கங்கை விரைவுச் சாலை​யில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்​ளிட்ட போர் விமானங்​கள் நேற்று தரை​யிறங்​கின. பின்​னர் அங்​கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்​றன. உ.பி.யின் மீரட், பிர​யாக்​ராஜை இணைக்​கும் வகை​யில் 1,047 கி.மீ. தொலை​வுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *