
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்புக் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன.