
சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் திமுக கடந்தாண்டு முதலே தேர்தல்களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டங்கள் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு அளித்துள்ளனர். இதில் ஒன்று இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதும் அடங்கும். இதைத்தொடர்ந்து சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை.