புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் பெருமை மிக்க இந்திய கடற்படை குடும்ப உறுப்பினரும், கல்வியாளருமான லலிதா ராம்தாஸ். முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் குறிவைக்கப்படுவதற்கு எதிராக ஹிமான்ஷி பேசியது பேசுபொருளானது நிலையில், இந்தப் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி ஹிமான்ஷி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *