சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பிரியாவிடம், “இது கறி அறுக்கும் இடம். அதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இன்று நடக்கும் அன்னதான நிகழ்ச்சியில் பலரும் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒரு இடத்தில்கூட பிளீச்சிங் பவுடரே தூவவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *