
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இண்டஸ்ட்ரீயல் டெக்னாலஜி-யில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்கொலையால் உயிரிழந்தார். இரண்டரை மாதங்களில் 2-வது நேபாளி உயிரிழந்த நிலையில் இச்சம்பவங்கள் குறித்து முழு விசாரணை கோரியுள்ளது அந்நாட்டு அரசு.
நேபாள மாணவி தனது விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களில், அரசு இவ்வாறு கோரியுள்ளது. முன்னதாக இதே கல்விநிறுவனத்தில் நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி லாம்சல் என்ற மாணவர் பிப்.16-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட இரண்டரை மாதம் கழித்து இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.