
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).
இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தோட்டத்தில் தனியாக வசித்து வரும் பெற்றோரைக் கடந்த இரண்டு நாட்களாக மகன் கவிசங்கர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சந்தேகமடைந்த கவிசங்கர் நேற்று இரவு அருகிலிருந்தவர்களிடம் பார்க்கச் சொல்லி உள்ளார். அப்போது ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, பெருந்துறை துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்க வளையல் உட்பட 15 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டினுள் பீரோவில் ஏதேனும் நகைகள் கொள்ளை போய் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரியில் தனியாகத் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb