
சென்னை: தொழில் வளர்ச்சி போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படும் திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
மே தினத்தை முன்னிட்டு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நினைவுத்தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியதாவது: