
சென்னை: கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் 9.5 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.