
சென்னை: சென்னை காவல் துறையில் பணியாற்றி வந்த ஓர் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர், 29 உதவி ஆய்வாளர்கள், 12 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சென்னை காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 47 பேர் பணி ஓய்வு பெற்றனர்.
அவர்களுக்கான பிரிவு உபசார விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.