
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.