சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் பெண் ஒருவர், கண் மருத்துவமனை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு லேப் டெக்னிஷியன் படிப்பைப் படித்து வருகிறார்.

இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல நொளம்பூர் வேணுகோபால் தெருவில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் அவ்வழியாக வந்த மர்ம நபர், திடீரென மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஹெல்ப், ஹெல்ப் எனச் சத்தம் போட்டார்.

உடனே பைக்கில் வந்தவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து மாணவி தரப்பில் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரைத் தேடிவந்தனர்.

சரத்பாபு

சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அந்த நபரை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது அந்த நபரின் பெயர் சரத்பாபு (31) என்றும் சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இவர், தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. சரத்பாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து சரத்பாபுவைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட சரத்பாபு, மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததைப் போல இன்னும் சிலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார்கள் வரவில்லை. அதனால் சரத்பாபுவிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *