கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (வயது: 40). இவரது மனைவி மதுமிதா (வயது: 35).

இந்த தம்பதிக்கு தியா (வயது: 10), ரிதன் (வயது: 3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அதேபோல், மதுமிதாவின் தந்தை முத்துக்கிருஷ்ணன் (வயது: 61). இவர்கள் ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக டெல்லி சென்றுள்ளனர்.

அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டுக் கடந்த 28-ம் தேதி கொல்கத்தாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தாவின் மச்சுவா பஜாரில் அமைந்துள்ள ருத்ராஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு, அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் வெளியே சென்று இருந்த நிலையில், அந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் அந்த ஹோட்டலில் இருந்த 14 பேர் உயிரிழந்தனர். இதில், கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள்

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊரான கரூர் கொண்டு வருவதற்குப் பிரபு குடும்பத்தினர் அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் உள்ள ஜோதிவடம் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைக் கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்குவங்க அரசுத்துறை அதிகாரிகளிடம் விரைவாகக் கரூர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பேசி உள்ளதாக, கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *