
பாரமுல்லா: சவுரிய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய், பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்தவர் முடாசிர் அகமது ஷேக். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றிய இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இவருக்கு மறைவுக்குப்பின் சூர்ய சக்ரா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.