
சென்னை: குற்றங்கள் நடக்காத, போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்ற நிலையை நாம் எட்ட ஒவ்வொரு காவலரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: