• April 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி. ரவீந்திரநாத், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி, காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். தேர்தல் ஆணையம் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *