
சென்னை: சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் உள்ள தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இடிந்து விழும் நிலையும் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக, இக்கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் தமிழக ரயில்வே காவல் துறையின், சென்னை மாவட்டத்துக்கான ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அருகே வலதுபுறத்தில் இந்த அலுவலக கட்டிடம் இருக்கிறது.