
சென்னை: தமிழக அரசின் ‘நம்ம சென்னை நம்ம சந்தை’ அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள், பழங்கள் செம்மொழிப் பூங்காவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மக்களுக்கு பாரம்பரிய பசுமையான காய்கறிகள், பழங்கள் கிடைக்கச் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் “நம்ம சென்னை நம்ம சந்தை” என்ற அங்காடி 2024-ல் தொடங்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தற்போது அனைத்து நாட்களிலும் செயல்பட்டுவருகிறது.