
சென்னை: “எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு கவலையளிக்கிறது. இனி எப்பவும் இதுபோல் செய்யவே கூடாது. இதை எனது கட்டளையாகவோ, கண்டிப்பாகவோ கூட எடுத்துக் கொள்ளலாம்.” என்று தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.