
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.
நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது. இதன்பிறகு 2010-ஆம் ஆண்டு ‘ஈசன்’ என்ற படத்தை சசிகுமார் இயக்கினார். அதன்பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் எந்த படமும் இயக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் பலரும் அவரிடம் படம் எப்போது இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.