
திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியின் 18-வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர், நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஏப்.29) யாசகம் பெறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகர் மன்றத்தலைவர் நா.குமார் தலைமையில் இன்று நடந்தது. நகராட்சி ஆணையர் (பொ) பால்ராஜ், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டம் தொடங்கியதுமே, 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.