• April 29, 2025
  • NewsEditor
  • 0

கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தனது வீட்டிலிருந்தபோது இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர்.

அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஆறுமுகத்தைக் கத்தியால் குத்தி விட்டு, அவரது வீட்டிலிருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்து பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில், கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதோடு, இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக, கரூர் மாவட்ட போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் ராஜீவ் காந்தி, அவரது நண்பர்கள் பிரசாந்த், மற்றொரு பிரசாந்த் ஆகிய மூன்று பேரும் ஆறுமுகம் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் குத்திவிட்டு வீட்டிலிருந்த 6 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகைகளைக் கொள்ளையடித்ததுச் சென்றது தெரியவந்தது.

vehicle

இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம், 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 கிராம் மதிப்புள்ள 45 தங்க காயின்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதோடு, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். வழக்கறிஞரைச் சக வழக்கறிஞரே தாக்கி, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *