• April 29, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவர் சுமையா பானு.

இவரது கணவர் நாகலிங்கம். இவர், திருமயம் பெல் ஆலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சணப்பட்டியில் நாகலிங்கம், சுமையா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சொந்த வேலையாக ஆந்திராவில் உள்ள காளகஸ்தி சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் கொள்ளையர்கள் 3 பேர், வீட்டின் பின்பக்கமாகச் சுவர் ஏறிக் குதித்து நுழைந்தனர்.

படுக்கையறையில் கொள்ளையர்கள் இரும்பு ராடுடன் நுழைந்து நாகலிங்கத்தைத் தாக்கி நகை, பணத்தைக் கேட்டனர். மேலும், எஸ்.ஐ-யைுயம் மிரட்டி நகைகளைக் கேட்டனர்.

இதனால், அவர்கள் இருவரும் பயத்தில் தாங்கள் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் என 10 பவுன் நகைகளைக் கழற்றி கொடுத்தனர்.

அதை அவர்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வீட்டின் பின்பக்கம் ஏறிக்குதித்து அங்கிருந்த தைலமரக்காடு வழியாகத் தப்பியோடினர்.

கொள்ளையர்கள் 3 பேரும் முகத்தில் துணியால் மறைத்து, சாரத்தைத் தொடைக்கு மேல் சுற்றிக் கட்டியும், சட்டை அணியாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

couple

சம்பவம் நடந்த வீட்டைப் புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா பார்வையிட்டார். அவரது உத்தரவின் போில் அமைக்கப்பட்ட 3 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடி நின்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதோடு, தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவரிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம், பொதுமக்களை மட்டுமல்லாமல், காவல்துறையினரையும் அதிர வைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *