• April 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஹல்காமின் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் பல சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ல் அனந்தநாக்கின் பைஸாரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் வந்த சுற்றுலாவாசிகள் 26 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் அங்கு வந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது முதன்முறையாக நடந்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலால், ஜம்மு – காஷ்மீரில் பல்வேறு வகை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, காஷ்மீரின் 12 முக்கிய சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த சுற்றறிக்கை அல்லது அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமான இந்த நடவடிக்கையால் அந்த மாநில மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *