• April 29, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை.

சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தனக்குப் பிடித்த துறைகளில் பல்வேறு பங்காற்றி சாதனைகளைப் படைத்து வருகிறார்.

சினிமா, மோட்டார் ரேஸிங் துறையில் சிறந்து விளங்கி வரும் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்ரல் 28) பத்ம பூஷண் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது.

மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் அஜித் பத்மபூஷண் விருதைப் பெறுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துப் பெருமிதப்பட்ட காணொலி, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியிருந்தது.

பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு குடும்பத்துடன் அஜித் குமார்

இதையடுத்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆங்கில ஊடகமான ‘India Today’ ஊடகத்திற்கு முழு நீள நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அஜித் குமார்.

அதில், “நான் இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Whatsapp Channel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *