
ரவுடி வெள்ளைக்காளி கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி சகோதரியின் மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் ஏப். 1-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.