
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராமத்தின் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.