• April 29, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: “பாஜக பிரமுகர் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளோம். இக்கொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.29) கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசின் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து மனு தரவுள்ளோம். அதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ளார். தற்போது ஆமூர் சாலையில் பாலங்கள் ஆறுக்கும் மேலே அமைக்கப்பட்டதில் தற்போது ஊழல் நடந்துள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறையில் நாமினேஷன் பணிகளிலும் ஊழல் நடந்துள்ளது. காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *