
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும், மருத்துவ விசாவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தது.
இதனால் இந்தியாவில் சிகிச்சைப் பெறும் பாகிஸ்தானியர்கள் பாதியிலேயே சிகிச்சைப் பெறுவதை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாங்கள் 45 நாள் விசாவைப் பெற்றுக்கொண்டு இந்தியா வந்தோம். இப்போது திடீரென்று நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள்.

நாங்கள் என்ன தவறு செய்தோம்? தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?” என்று இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பாகிஸ்தானியர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs