
தமிழகத்தில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதால் காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காவலர்களுக்கு முறையாக விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக காவலர்கள் பொதுமக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் உருவாகி வருகிறது.