• April 29, 2025
  • NewsEditor
  • 0

கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’.

கள்​ளக்​குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்​பில் திருக்​கோ​விலூர் மேற்​கு, கிழக்​கு, வடக்கு ஒன்​றி​யங்​களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்​பாளர்​கள் மற்​றும் துணை அமைப்​பாளர்​களுக்​கான ஆய்​வுக் கூட்​டம் 27-ம் தேதி நடை​பெற்​றது. ரிஷிவந்​தி​யம் தொகு​திக்​குட்​பட்ட திருக்​கோ​விலூர் மேற்கு ஒன்​றிய செய​லா​ளர் ஐயனார், கிழக்கு ஒன்​றிய செய​லா​ளர் ராஜேந்​திரன், வடக்கு ஒன்​றிய செய​லா​ளர் பூமாரி கிருஷ்ண​மூர்த்தி ஆகி​யோர் இந்​தக் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *