
சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார்.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.