
சென்னை: தமிழகம் முழுவதும் 77 மாவட்ட அமர்வு நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: அரசு சொத்தாட்சியர் மற்றும் நிர்வாக அறங்காவலராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதி டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன், சென்னை 8-வது சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்.ஈஸ்வரன், சென்னை 9-வது சிபிஐ நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.